சனி, டிசம்பர் 31

சாரலும் முகபுத்தகமும்

நிலத்தில் கேழ்வரகை விதைத்து விட்டு பருவ மழையை எதிர்பார்த்து கொண்டிருந்தாள் எனது அன்னை.

அது வானம் பார்த்த புன்செய் சில நேரங்களில் வான்மகளின் கடைகண் பார்வை படும். வெகு நேரங்களில் பளீர் புன்னகையுடன் இடம் மாறி சென்றுவிடுவாள் அந்த மாரி. அன்றும் அப்படித்தான் அவள் கைவிரல் பட்டுவிடும் என்று பல விடலை பயிரும் காத்து கொண்டிருந்தது. 

எங்கோ தொலைவில் இனிய இசை .....
இணைய தொலைபேசியில் இருந்தோ
இணைய கை கணினியில் இருந்தோ வந்த
மார்கழி மாத கச்சேரி அல்ல ...
தூரத்தில் ஒரு தூக்கனா குருவி
அதன் தோழியிடம் கவிதை பேசி கொண்டிருந்தது

நான் கேட்காமல் இருந்தாலும் மாலை தேநீர் எனக்கு பிடிக்கும் என்று என்னிடம் குவளையை நீட்டினால் என் துணைவி. நான் முகபுத்தகத்தை எனது மடி கணினியில் மேய்ந்து கொண்டிருந்தேன். அதை பார்த்து அண்டை வீட்டு பசு  தோற்று ஒரு இடதில் முடங்கி விட்டது.


வான் மகள் வீட்டில் யாரோ அனுமதியின்றி மிருதங்கம் வாசித்தார்கள், அறை சன்னலை நன்றாக சாத்தி கொண்டேன். சடார் என்று என் முகத்தில் பரவசம். பலவருடமாக சந்திகாத எனது நண்பனிடம் முகபுத்தகதில் அரட்டை அடித்து கொண்டிருந்தேன். நிறைய பகிர்ந்து கொண்டோம். வானில் தட்டாம் பூச்சியாய் பறந்த நினைவுகளை அசை போட்டோம்.

அவனும் ஐ.டி துறையில் நல்ல பணியில் இருப்பதாக கூறினான். அந்த அயல் நாட்டு செல்வ நகரில் வசதியான மாளிகை. மழலை செல்வங்களுக்கு நல்ல பாதுகாப்பு. அவர்களுக்கு மெத்த நுட்பத்துடன் கல்வி என்று நன்றாக இருக்கிறான்.

வெகு நேர அரட்டைக்கு பின் விடைபெற்று கொண்டோம். மடி கணினியை தூங்க வைத்து விட்டு நிமிர்ந்தேன் எனது அன்னையின் புன்னகை கேட்டது சமையல் அறையை நோக்கி சென்றேன். 

நான் எனது நண்பனை பற்றி பேச முற்பட்ட பொழுது அவள் என்னை கண்டு கொள்ளவில்லை கை பேசியில் அவளது வேளான் தோழியுடன் எதோ உளறி கொண்டிருந்தாள்.

சன்னலை திறந்து வெளியே பார்த்தேன். வான் மகள் நன்றாக குளித்து விட்டு தன் கூந்தலை ஒய்யாரமாக கோதி விட தொடங்கி விட்டால் இப்பொழுது.

எனது துணைவி பார்த்து என்ன சமையல் என்று வினவினேன் அவள் கேழ்வரகு தோசை என்றால் அலுவலகத்தில் உடல் ஆரோகியதிற்காக கொடுத்த மதிப்பீடு நினவு வந்தது. எங்கோ தொலைவில் 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்' என்ற பாடலை ஒரு கிராமத்து பழமைவாதி கேட்டு கொண்டிருந்தான்.

நான் மீண்டும் மடி கணினியை தட்டி எழுப்பி முக புத்தகத்தில் நனைந்தேன்.

புதன், டிசம்பர் 14

எட்டாம் அறிவு

ஆரம்ப கால மனிதன் தனியாக வேட்டையாடி தனது உணவு தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பின்பு குழுக்களாக சேர்ந்து வேட்டை யாடினான்.
உணவை சரியாக பகிர்வதற்கு ஒருவனை தேர்ந்தெடுத்தான்.  காலபோக்கில் சட்ட திட்டங்களை வகுத்து பணிகளை பிரித்து மேற்பார்வையிட சிறு தலைவர்களை தேர்ந்தெடுத்தான்.


தேவைகள் அதிகமாக மற்ற குழுக்களை நாட ஆரம்பித்தான். பொருட்களை பரிமாற்றி கொள்ள மதிப்பீடு தேவை பட்டது. இந்த  மதிபீடு அளவை கூட்ட பொருளாதார ஏற்ற தாழ்வை நிலை நிறுத்தினான்.


இந்த  ஏற்ற தாழ்வை வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் தங்களது ஏழாம் அறிவை பயன் படுத்தி  குறைத்தனர். அதனால் அந்த நாடுகள் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் துறை என்று அணைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது .


ஆனால் நமது நாட்டில் தலைவர்கள் தனது ஏழாம் அறிவை தங்கள் வளர்சிக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள். இதையும் தாண்டி காமராசர் , பெரியார் , ஜீவா மற்றும் பல தலைவர்கள் தானாக முளைதார்கள்.  அவர்கள் விதைத்த விதைகள் இன்று மரமாக வளர்ந்து பயன்தருகிறது.

இந்த விதைகளுடன் நச்சு காளான் விதைகளை சரியான விகிதத்தில் இன்றைய தலைவர்கள் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காளான்களை பிடுங்குவது போல் பிடுங்கி அதிக நச்சு விதைகளை சேர்கிறார்கள்.  இதை எப்படி தடுப்பது ? 

பக்கம் பக்கமா எழுதுவது !  நவீன ஊடகத்தில் வாய் பிளிற கத்துவது ! ஒன்றாக ஒரு இடத்தில் கூடி நச்சு காளான் வியாபாரிகளிடம் நீதி கேட்பது!
எதுவும் சரிபட்டு வராது.  வளர்ந்த  நமக்கும் வறுமை கோட்டில் தத்தளிக்கும் மக்களுக்கும் ஒரு மிக பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டார்கள்.
முதலில் இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். இல்லை எனில் அவர்களை நமக்கு எதிராக திருப்பி விட்டு கொண்டே இருப்பார்கள். ஏழாம் அறிவை விட ஒரு மாற்று வழி தேவை படுகிறது. 
மீண்டும் போராடுவது . இதற்கு பத்திரிகை தேவையில்லை ! மேடை தேவை இல்லை !ஆயுதம்  தேவை இல்லை ! வாக்கு சாவடி தேவை இல்லை ! பின்பு எப்படி ? நான் முன்பு கூறியது போல் நமது தலைவர்கள் சில நல்ல பயிர்களை வளரவிடுவார்கள். இவர்களை பற்றி கவலை இல்லை.
நாம் செய்யவேண்டியது இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு அதிகமாக ஏழை மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். மிக பொருட் செலவு தேவை இல்லை ஓரளவுக்கு இழிவு வேலை செய்யாமல் இருக்க என்ன கல்வி யோ அதை தாருங்கள்.

கண் தானத்தை விட கல்வி தானமே சிறந்தது.

சில படிப்புகள் தோராய செலவுடன் :
தொலை தூர பட்டம் மற்றும் ஆங்கில சொல் ஆற்றல் - ஐம்பதாயிரம்
கணினி தட்டச்சு  - இருபத்தி ஐந்தாயிரம்
பொறியியல் பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
மருத்துவ பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
பொறியியல் மற்றும் மருத்துவம்  பட்ட படிப்பு -
அரசு உதவி தொகை + ஒரு லட்சம்

இதை செய்து விட்டால் போதும் அவர்கள் கல்வி பெற்று தங்களது சுற்றத்தை வளர்த்து விடுவார்கள். ஒன்று ஈராகும் பின்பு மூன்று முப்பது ஆகும்.  பின்பு தானாக ஏற்ற தாழ்வை குறைத்து விடலாம்.  இந்த போராட்டத்தில் எல்லோரும் தலைவர்கள். தலைவன் தொண்டன் என்ற முறை ஒழிந்து விட்டது. 


போராட புறபடுங்கள் !


(வெற்றி-வெற்றி  தான் தேவை வெற்றி தோல்வி அல்ல http://www.stephencovey.com/blog/?tag=win-win )



























ஞாயிறு, அக்டோபர் 23

நண்பன் நாட்டாமை கார்த்திக்காக ...

பவானி நகரமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிகப்பட்டு விட்டன. முடிவுகள் நமக்கு சாதகமாக இல்லை. தேர்தல் ஆணையம் நாம் தோற்றுவிட்டோம் என்று அறிவித்து இருக்கலாம். ஆனால் பணபலம் என்ற அசுரனை எதிர்த்து மூன்றாம் இடம் பிடித்த மாவீரன் நீ. இந்த முடிவு நமக்கு நன்மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. நெடிய பயனதிருக்கு ஆதாரமிட்ட நுழைவு சீட்டு.


இனி அடுத்த ஆட்டத்தில் கவனமாக ஆடினால் முழு வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை . வெற்றி பெற இரண்டு முக்கிய கூறுகளை அறிய வேண்டும். ஒன்று பலம் மற்றொன்று பலவீனம்.


தேர்தல் களத்தில் இறங்குவதற்குமுன் நம் பலம் என்ன வென்று நாம், நம்மை சுற்றி இருப்பவர்கள் அறியவேண்டும். களத்தில் இறங்கிவிட்டால் நாம் எதிரின் பலவீனத்தை நம் பலமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.


தோல்வி என்பது எதிரிகளால் மட்டும் ஏற்படுவதில்லை நம்மை சுற்றி உள்ள துரோகிகளால் ஏற்படுகிறது. எதிருக்கு எதிரி நண்பன் தான் ஆனால் சில நேரங்களில் துரோகிகளை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இங்கு விலை என்பது பணம் என்பதை மட்டும் குறிப்பிடவில்லை எல்லா வகை உத்தி களையும் பயன்படுத்த வேண்டும்.



பணம் வைத்து விளை யாடும் ரம்மி ஆட்டத்தில் நாம் சும்மா ஆடினால் முழு வெற்றி கிடைக்காது. அடுத்த முறை மக்களுக்கு பணியாற்ற நற் பெயர் மட்டும் பத்தாது பணம் என்ற ஊட்ட சத்துடன் மோதுவோம்.


பவானி தளபதி நாட்டாமை கார்த்தியின் பின் நமது நண்பர்கள் பக்க பலமாக இருப்போம். நாளை நமதே !

திங்கள், செப்டம்பர் 12

பதப்படுதபடாத தேநீர் (கிரீன் டீ)

தேநீர் என்பது  பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு என்று கூட வைத்து கொள்ளலாம்.

அது என்ன பதப்படுதபடாத தேநீர் என்று வினவுவருக்கு அடைபுகுறிகுள் இருக்கும் தங்க்லீஷ் வார்த்தை விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.  வெளிநாட்டுவாழ் இந்திய நண்பர்களுக்கு அதிகம் இதை பற்றி சொல்லவேண்டியதில்லை.

பதப்படுதபடாத தேநீரின் பயன்பாடுகளை சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர்களிடம் கேட்டும் வலையில் படித்தும் தெரிந்து கொண்டேன்.

சீனர்கள் தேயிலையை கி.மு 2737ல் கண்டுபிடித்தனர் பின்பு ஜப்பானியர்கள் தேயிலை பயன்பாடுகளை ஒழுங்குமுறை படுத்தி ச-நோ-யு(Cha-no-yu) என்று பெயரிட்டனர்.


புதிதாக பறிகபட்ட தேயிலையை உலர்த்தி அதை புளிக்க விடாமல் சூடுபடுத்தி கிரீன் டீ  தயாரிக்கபடுகிறது.  பொதுவாக மேல்தட்டு மக்கள் இந்த பானத்தை விரும்பி அருந்திவந்தனர்.

கிரீன் டீ அருந்தினால் உடனே உடல் மெலிந்து விடும் என்பது எல்லாம் கட்டு கதை. 

ஆனால் உடல் பருமனால் ஏற்படும் ஒருவித மந்த தன்மையை  போக்கும். 

புற்று நோய் வருவதை தடுக்கும் வல்லமை  கிரீன் டீ க்கு உண்டு. மேலும் இந்த பானம் தோல் சுருக்கங்களை குறைத்து பொலிவான தோற்றத்துக்கு வழி வகுக்கும்.  

கிரீன் டீயில் உயிர்ச்சத்து (வைட்டமின்) உள்ளதால் ரத்த அழுத்த நோய்களை குணபடுத்தும். மேலும் அதன் பயன்பாடுகள்,

  • இரத்த நாடி நோய் வராமல் இருக்க உதவும் 
  • நல்ல கொழுப்பின் சதவிதத்தை கூட்டும்
  • உடல் வலியை தடுக்கும்
  • பற்கள்  கெட்டு  போவதை தடுக்கும்   

மேலே உள்ள பயன்பாடுகளை முழுமையாக பெற, கிரீன் டீயை குறைந்தது நான்கு குவளை யாவது அருந்த வேண்டும்.

உடல் உழைபின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்து  வேலை பார்க்கும் நம்மை 
போன்றவர்களுக்கு  கிரீன் டீ   ஒரு சரியான பானம்.

இந்தியாவில் கிரீன் டீயை ஒரு பேஷன்னாக அருந்தி வருகிறார்கள்.  பெரும்பாலான நடிகைகள் மாடல்கள் விருப்ப பானமாக  கிரீன் டீ உள்ளது.

வெளிநாடுகளில் இதை சர்வசாதரனமாக வாங்கலாம்.  இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

நண்பர்கள்  கண்டுபிடித்தால் கருத்துரையிடுக.

வலையில் படித்த அறிவுரை கிரீன் டீயில் கோப்பின் உள்ளதால், தூக்கமின்மை வர வாய்புள்ளது.

நலமுடன் வாழ வாழ்த்துகள். 

வெள்ளி, செப்டம்பர் 9

மர்ம யோகி

தலைப்பை பார்த்ததும் இது ஆண்டாண்டு காலமாக இந்திய திரைப்படங்கள் அரைத்து கொண்டு இருக்கும் ராபின் ஹூட் கதை என்று தவறாக நினைக்க வேண்டாம்.
என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஐயம்  அதைப்பற்றி உங்களிடம் கொட்டிதிர்க்க வேண்டும் போல் உள்ளது.
உடல் ஆரோகியதிர்கனா மதிப்பீடு (ஸ்கோர் கார்டு/BMI) மிக மோசமாக ஒருவற்கு இருந்தால் அவர்களை கிழேகாணும் வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை பெருக்குமாறு அறிவுருதபடுகிறார்கள்.
  • மெதுவான உடற் பயிற்சி
  • யோகாசனம்
  • நடனம்

சரி இதில் யோகாசனம் தான் சிறந்த பாதை என்று நினைத்தேன். யோகாசனம் பயிற்றுவிக்கும் பாடசாலைகளை தேட ஆரம்பித்தேன்.

சிங்கப்பூரில் உடற் பயிற்சி மையங்கள் போன்று நிறைய யோகா மையங்கள் உள்ளன. விளம்பர செய்தி தாள்கள் படித்தும் மற்றும் வலையில் தேடியும் பார்த்தேன். ஆனால் அதற்கான சந்தாவை (Membership Fee) பார்த்தால் அப்பப்பா தலை சுற்றுகிறது.

சரி இது வளர்ந்த நாடு அதனால் தான் பெட்ரோல் விலை வெங்காய விலை சொல்கிறார்கள் என்று (குதிரை, யானை விலை எல்லாம் இந்த காலத்திற்கு உதரணமாக எடுத்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை) நம் மண்ணின் பக்கம் வலையில் தேடி பார்த்தேன்.

சிங்கப்பூர் தேவலாம். இந்தியாவில் எல்லாம் பன்னாட்டு நிறுவனம் போன்று எல்லா யோகா மையங்களும் செயல் படுகிறது.

கீழ் நிலை, மேல் நிலை, நடு நிலை என்று வகை படுத்தி வைத்திருக்கிறார்கள். கட்டணம் எல்லாம் அமெரிக்க டாலர்களில் குறிபிட்டு இருந்தார்கள். இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது. பயிற்று விக்கும் பயிற்சியாளர்கள் மன்னிக்கவும் குருஜீகள் இறைவன் போன்று வலை புகை படங்களில் ஜொலித்தார்கள்.

அப்பொழுதுதான் என் மனதில் ஐயம் எழுந்தது. பண்டை காலத்தில் வாழ்ந்த மகான்களால் தோற்றுவிக்க பட்ட இந்த கலையை எப்படி சாதாரண குடிமக்கள் பயன் படுத்தி இருப்பார்கள். ஒரு வேலை மன்னர்கள் இலவசமாக கற்றுதர வேண்டும் என்று ஆணையிட்டு இருந்துருபார்கள்.

எது எப்படியோ நவீனகால யோகா யோகிகளை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும் அவர்களது கலையை முறை படுத்தவேண்டும்.

இல்லை என்றால் கலையை பயன் படுத்தும் நவநாகரிக நாடுகள் நம்மை கேலி செய்யும், இந்த கூட்டத்தில் குவிந்து கடக்கும் மர்ம யோகிகள் நம் பர்சை காலி செய்து விடுவார்கள்.

ஒரு அன்பான வேண்டுகோள்  யோகா தெரிந்த நண்பர்கள் மற்றவர்களுக்கு இல்லவசமாக பயிற்றுவிக்க வேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 2

பில் கட்டியாச்சா ! பில் கட்டியாச்சா !

ஒரு காலத்தில் ஒன்னாம் தேதி வந்தால் உற்சாகம் தான் அப்பா கடையில இருந்து பலகாரம் வாங்கி வருவார். தாத்தா ஊரில் இருந்து வருகை தந்து இருப்பார். குழந்தைகள் புது பொருள் வாங்க பட்டியல் வைத்திருப்பார்கள்.

அம்மா மனம் கமல சமையல் செய்துருபார் , எப்படியும் இந்த மாதம் வண்டி கடை காரனிடம் போன தடவை மௌன ராகம் படத்திருக்கு சென்ற பொது முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் கட்டிவந்த சேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பொடி வைத்து பேசுவாள்.



ஆனால் இன்று ! 31 ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பில் கட்டியாச்சா ! கட்டியாச்சா ! என்று Iphone அலறுகிறது , விழிப்புள்ள மின் அஞ்சல் வந்து நினை விடுகிறது . அப்பப்பா.. எத்தனை EMI கள் எத்தனை கட்டணங்கள் மூச்சு முட்டுகிறது. வங்கில வாங்கின வீட்டு கடன், அந்த தனியார் வங்கில வாங்கின மோட்டார் வாகன கடன், உடன்பிறந்தவர்களுகாக வாங்கின தனிப்பட்ட கடன்,
இப்படி கடனில் தான் நம் வாழ்கை ஓடுகிறது.





சம்பளம் போட்டாச்சு என்று தானியியக்க வங்கி இயந்தரத்தில் (ATM) பொத்தானை அலுத்தி பணம் எடுபதற்குள் இந்த வங்கிகள் உடனே பற்று (Debit) செய்து விடுகிறது. ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது 'Youtube லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்'.  

இப்படி பொருளாதார அடிப்படைல நம்மை அடிமை படுத்தியது யார் ? இதை எப்படி உடைதெரிவது ? யோசனை செய்யுங்கள்.
நான் பில் கட்ட போகனும் மீண்டும் சந்திப்போம்.

செவ்வாய், ஆகஸ்ட் 30

மண் குதிரை பயணம்

ஒரு சாதாரண அரசு கணக்கு ஆய்வாளரின் மகனாக பிறந்து, படித்து IT துறை யில் வேலை பார்த்து பொருட் தேவையை நிவர்த்தி செய்து கொண்டு இருகிறேன். நான் தேர்வு செய்த இந்த IT துறை எனக்கு தந்த விருதுகள்:
- உடல் வலி
- பொறுமை இன்மை
- உடல் பருமன்


என்னால் என் தந்தை வாழ்ந்த  நிமத்தியான வாழ்கை வாழமுடியவில்லை. 
அறிவு பெற்று நாட்டின் தொழில் வளர்சிக்கு உதவ முடியாமலும் சுய தொழில் செய்து உற்பத்தி திறனை பெருக்க முடியாமலும் மாத கூலிக்கு ஏங்கி நிற்கும் என்னை மாதிரி  மண் குதிரை ராஜாக்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

இந்த மண் குதிரை பயணம் வெற்றியும் தராமல் நிம்மதியும் தராமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ...