வெள்ளி, செப்டம்பர் 9

மர்ம யோகி

தலைப்பை பார்த்ததும் இது ஆண்டாண்டு காலமாக இந்திய திரைப்படங்கள் அரைத்து கொண்டு இருக்கும் ராபின் ஹூட் கதை என்று தவறாக நினைக்க வேண்டாம்.
என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஐயம்  அதைப்பற்றி உங்களிடம் கொட்டிதிர்க்க வேண்டும் போல் உள்ளது.
உடல் ஆரோகியதிர்கனா மதிப்பீடு (ஸ்கோர் கார்டு/BMI) மிக மோசமாக ஒருவற்கு இருந்தால் அவர்களை கிழேகாணும் வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை பெருக்குமாறு அறிவுருதபடுகிறார்கள்.
  • மெதுவான உடற் பயிற்சி
  • யோகாசனம்
  • நடனம்

சரி இதில் யோகாசனம் தான் சிறந்த பாதை என்று நினைத்தேன். யோகாசனம் பயிற்றுவிக்கும் பாடசாலைகளை தேட ஆரம்பித்தேன்.

சிங்கப்பூரில் உடற் பயிற்சி மையங்கள் போன்று நிறைய யோகா மையங்கள் உள்ளன. விளம்பர செய்தி தாள்கள் படித்தும் மற்றும் வலையில் தேடியும் பார்த்தேன். ஆனால் அதற்கான சந்தாவை (Membership Fee) பார்த்தால் அப்பப்பா தலை சுற்றுகிறது.

சரி இது வளர்ந்த நாடு அதனால் தான் பெட்ரோல் விலை வெங்காய விலை சொல்கிறார்கள் என்று (குதிரை, யானை விலை எல்லாம் இந்த காலத்திற்கு உதரணமாக எடுத்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை) நம் மண்ணின் பக்கம் வலையில் தேடி பார்த்தேன்.

சிங்கப்பூர் தேவலாம். இந்தியாவில் எல்லாம் பன்னாட்டு நிறுவனம் போன்று எல்லா யோகா மையங்களும் செயல் படுகிறது.

கீழ் நிலை, மேல் நிலை, நடு நிலை என்று வகை படுத்தி வைத்திருக்கிறார்கள். கட்டணம் எல்லாம் அமெரிக்க டாலர்களில் குறிபிட்டு இருந்தார்கள். இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது. பயிற்று விக்கும் பயிற்சியாளர்கள் மன்னிக்கவும் குருஜீகள் இறைவன் போன்று வலை புகை படங்களில் ஜொலித்தார்கள்.

அப்பொழுதுதான் என் மனதில் ஐயம் எழுந்தது. பண்டை காலத்தில் வாழ்ந்த மகான்களால் தோற்றுவிக்க பட்ட இந்த கலையை எப்படி சாதாரண குடிமக்கள் பயன் படுத்தி இருப்பார்கள். ஒரு வேலை மன்னர்கள் இலவசமாக கற்றுதர வேண்டும் என்று ஆணையிட்டு இருந்துருபார்கள்.

எது எப்படியோ நவீனகால யோகா யோகிகளை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும் அவர்களது கலையை முறை படுத்தவேண்டும்.

இல்லை என்றால் கலையை பயன் படுத்தும் நவநாகரிக நாடுகள் நம்மை கேலி செய்யும், இந்த கூட்டத்தில் குவிந்து கடக்கும் மர்ம யோகிகள் நம் பர்சை காலி செய்து விடுவார்கள்.

ஒரு அன்பான வேண்டுகோள்  யோகா தெரிந்த நண்பர்கள் மற்றவர்களுக்கு இல்லவசமாக பயிற்றுவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: