திங்கள், செப்டம்பர் 12

பதப்படுதபடாத தேநீர் (கிரீன் டீ)

தேநீர் என்பது  பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு என்று கூட வைத்து கொள்ளலாம்.

அது என்ன பதப்படுதபடாத தேநீர் என்று வினவுவருக்கு அடைபுகுறிகுள் இருக்கும் தங்க்லீஷ் வார்த்தை விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.  வெளிநாட்டுவாழ் இந்திய நண்பர்களுக்கு அதிகம் இதை பற்றி சொல்லவேண்டியதில்லை.

பதப்படுதபடாத தேநீரின் பயன்பாடுகளை சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர்களிடம் கேட்டும் வலையில் படித்தும் தெரிந்து கொண்டேன்.

சீனர்கள் தேயிலையை கி.மு 2737ல் கண்டுபிடித்தனர் பின்பு ஜப்பானியர்கள் தேயிலை பயன்பாடுகளை ஒழுங்குமுறை படுத்தி ச-நோ-யு(Cha-no-yu) என்று பெயரிட்டனர்.


புதிதாக பறிகபட்ட தேயிலையை உலர்த்தி அதை புளிக்க விடாமல் சூடுபடுத்தி கிரீன் டீ  தயாரிக்கபடுகிறது.  பொதுவாக மேல்தட்டு மக்கள் இந்த பானத்தை விரும்பி அருந்திவந்தனர்.

கிரீன் டீ அருந்தினால் உடனே உடல் மெலிந்து விடும் என்பது எல்லாம் கட்டு கதை. 

ஆனால் உடல் பருமனால் ஏற்படும் ஒருவித மந்த தன்மையை  போக்கும். 

புற்று நோய் வருவதை தடுக்கும் வல்லமை  கிரீன் டீ க்கு உண்டு. மேலும் இந்த பானம் தோல் சுருக்கங்களை குறைத்து பொலிவான தோற்றத்துக்கு வழி வகுக்கும்.  

கிரீன் டீயில் உயிர்ச்சத்து (வைட்டமின்) உள்ளதால் ரத்த அழுத்த நோய்களை குணபடுத்தும். மேலும் அதன் பயன்பாடுகள்,

  • இரத்த நாடி நோய் வராமல் இருக்க உதவும் 
  • நல்ல கொழுப்பின் சதவிதத்தை கூட்டும்
  • உடல் வலியை தடுக்கும்
  • பற்கள்  கெட்டு  போவதை தடுக்கும்   

மேலே உள்ள பயன்பாடுகளை முழுமையாக பெற, கிரீன் டீயை குறைந்தது நான்கு குவளை யாவது அருந்த வேண்டும்.

உடல் உழைபின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்து  வேலை பார்க்கும் நம்மை 
போன்றவர்களுக்கு  கிரீன் டீ   ஒரு சரியான பானம்.

இந்தியாவில் கிரீன் டீயை ஒரு பேஷன்னாக அருந்தி வருகிறார்கள்.  பெரும்பாலான நடிகைகள் மாடல்கள் விருப்ப பானமாக  கிரீன் டீ உள்ளது.

வெளிநாடுகளில் இதை சர்வசாதரனமாக வாங்கலாம்.  இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

நண்பர்கள்  கண்டுபிடித்தால் கருத்துரையிடுக.

வலையில் படித்த அறிவுரை கிரீன் டீயில் கோப்பின் உள்ளதால், தூக்கமின்மை வர வாய்புள்ளது.

நலமுடன் வாழ வாழ்த்துகள். 

கருத்துகள் இல்லை: