ஞாயிறு, பிப்ரவரி 1

பன்றி காய்ச்சல் ஒரு எச்சரிக்கை !

நாடு முழுவதும் 70க்கு மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலுக்கு கடந்த மூன்று வாரங்களில் பலி !

பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முக்கிய பொறுப்பு பொது மக்களுக்கு உண்டு. ஏதேனும் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் தனித்து இருங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்து ஓய்வு எடுங்கள்.

காய்ச்சலால் மிகமோசமான நிலைமைக்கு தள்ளபட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். அவசர தேவைக்கு உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்க :-
044-24350496,044-24334811, 
9444340496, 9361482899

பன்றி காய்ச்சல் பற்றி உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 104 தொடர்பு கொள்க.

(பொதுநலம் கருதி இந்த செய்தியை பகிரவும் )

விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண்

கல்பனா சாவ்லா நினைவு தினம் 
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

“பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று நாசாவில் பணியில் அமர்ந்து உலகசாதனை படைத்தார்.

கல்பனா இந்திய மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் சாதனையாளராக இன்றும் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.