நிலத்தில் கேழ்வரகை விதைத்து விட்டு பருவ மழையை எதிர்பார்த்து கொண்டிருந்தாள் எனது அன்னை.
அது வானம் பார்த்த புன்செய் சில நேரங்களில் வான்மகளின் கடைகண் பார்வை படும். வெகு நேரங்களில் பளீர் புன்னகையுடன் இடம் மாறி சென்றுவிடுவாள் அந்த மாரி. அன்றும் அப்படித்தான் அவள் கைவிரல் பட்டுவிடும் என்று பல விடலை பயிரும் காத்து கொண்டிருந்தது.
அது வானம் பார்த்த புன்செய் சில நேரங்களில் வான்மகளின் கடைகண் பார்வை படும். வெகு நேரங்களில் பளீர் புன்னகையுடன் இடம் மாறி சென்றுவிடுவாள் அந்த மாரி. அன்றும் அப்படித்தான் அவள் கைவிரல் பட்டுவிடும் என்று பல விடலை பயிரும் காத்து கொண்டிருந்தது.
எங்கோ தொலைவில் இனிய இசை .....
இணைய தொலைபேசியில் இருந்தோ
இணைய கை கணினியில் இருந்தோ வந்த
மார்கழி மாத கச்சேரி அல்ல ...
தூரத்தில் ஒரு தூக்கனா குருவி
அதன் தோழியிடம் கவிதை பேசி கொண்டிருந்தது
இணைய தொலைபேசியில் இருந்தோ
இணைய கை கணினியில் இருந்தோ வந்த
மார்கழி மாத கச்சேரி அல்ல ...
தூரத்தில் ஒரு தூக்கனா குருவி
அதன் தோழியிடம் கவிதை பேசி கொண்டிருந்தது
நான் கேட்காமல் இருந்தாலும் மாலை தேநீர் எனக்கு பிடிக்கும் என்று என்னிடம் குவளையை நீட்டினால் என் துணைவி. நான் முகபுத்தகத்தை எனது மடி கணினியில் மேய்ந்து கொண்டிருந்தேன். அதை பார்த்து அண்டை வீட்டு பசு தோற்று ஒரு இடதில் முடங்கி விட்டது.
வான் மகள் வீட்டில் யாரோ அனுமதியின்றி மிருதங்கம் வாசித்தார்கள், அறை சன்னலை நன்றாக சாத்தி கொண்டேன். சடார் என்று என் முகத்தில் பரவசம். பலவருடமாக சந்திகாத எனது நண்பனிடம் முகபுத்தகதில் அரட்டை அடித்து கொண்டிருந்தேன். நிறைய பகிர்ந்து கொண்டோம். வானில் தட்டாம் பூச்சியாய் பறந்த நினைவுகளை அசை போட்டோம்.
அவனும் ஐ.டி துறையில் நல்ல பணியில் இருப்பதாக கூறினான். அந்த அயல் நாட்டு செல்வ நகரில் வசதியான மாளிகை. மழலை செல்வங்களுக்கு நல்ல பாதுகாப்பு. அவர்களுக்கு மெத்த நுட்பத்துடன் கல்வி என்று நன்றாக இருக்கிறான்.
வெகு நேர அரட்டைக்கு பின் விடைபெற்று கொண்டோம். மடி கணினியை தூங்க வைத்து விட்டு நிமிர்ந்தேன் எனது அன்னையின் புன்னகை கேட்டது சமையல் அறையை நோக்கி சென்றேன்.
நான் எனது நண்பனை பற்றி பேச முற்பட்ட பொழுது அவள் என்னை கண்டு கொள்ளவில்லை கை பேசியில் அவளது வேளான் தோழியுடன் எதோ உளறி கொண்டிருந்தாள்.
சன்னலை திறந்து வெளியே பார்த்தேன். வான் மகள் நன்றாக குளித்து விட்டு தன் கூந்தலை ஒய்யாரமாக கோதி விட தொடங்கி விட்டால் இப்பொழுது.
எனது துணைவி பார்த்து என்ன சமையல் என்று வினவினேன் அவள் கேழ்வரகு தோசை என்றால் அலுவலகத்தில் உடல் ஆரோகியதிற்காக கொடுத்த மதிப்பீடு நினவு வந்தது. எங்கோ தொலைவில் 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்' என்ற பாடலை ஒரு கிராமத்து பழமைவாதி கேட்டு கொண்டிருந்தான்.
சன்னலை திறந்து வெளியே பார்த்தேன். வான் மகள் நன்றாக குளித்து விட்டு தன் கூந்தலை ஒய்யாரமாக கோதி விட தொடங்கி விட்டால் இப்பொழுது.
எனது துணைவி பார்த்து என்ன சமையல் என்று வினவினேன் அவள் கேழ்வரகு தோசை என்றால் அலுவலகத்தில் உடல் ஆரோகியதிற்காக கொடுத்த மதிப்பீடு நினவு வந்தது. எங்கோ தொலைவில் 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்' என்ற பாடலை ஒரு கிராமத்து பழமைவாதி கேட்டு கொண்டிருந்தான்.
நான் மீண்டும் மடி கணினியை தட்டி எழுப்பி முக புத்தகத்தில் நனைந்தேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக