புதன், ஜனவரி 25

காணும் பொங்கலும் எருது ஆட்டமும்

தமிழன் பல்வேறு வகையில் தனது விழாக்களை கொண்டாடுகிறான். உழவர்  வெற்றி விழாவும் பல சுவைகளுடன் பூலோக ரீதியாக மாறுபட்டு கொண்டாடபடுகிறது. சேலம் மாவட்டத்தில் எருது ஆட்டமும் காணும் பொங்கல் ஒட்டி கிராமத்து மக்களால் ரசித்து நடத்த படுகிறது. அதை நண்பர்களுடன் பகிர இந்த இடுக்கை.  
 
சேலத்தில் அமைந்திற்கும் நைனா மலை பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது. நைனாகனூரில் உள்ள பழமையான பெருமாள் கோவில் நைனா மலையில் இருந்து பிரிக்கப்பட்டு அந்த கிராமத்து முன்னோர்களால் அமைக்க பட்டது. அதனால் இந்த ஊருக்கு நைனா கல் ஊர் என்ற பொருட் பெயர் வந்தது. 

காலை நேரத்தில் மக்கள் பெருமாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். நடமாடும் அங்காடிகளும் தற்காலிக அங்காடிகளும் கோவிலை சுற்றி குவிந்தன.  வண்ண வண்ண பலூன்கள் விற்கும் மிதி வண்டி அங்காடி, நாட்டு சுவை குளிர்பானம் விற்கும் தள்ளு வண்டி அங்காடி, தமிழ் அழகிகளின் கண்கவரும் அணி கலன்களை விற்கும் அங்காடி, குழந்தை களை மகிழ்விற்க பொம்மைகள் விற்கும் அங்காடி என்று பல அங்காடிகள் கோவிலை முற்றுகை இட்டன. 

மாலை நேரத்தில் எருது ஆட்டம் துவங்க பட்டது பல கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட எருதுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து அழகு படுத்தி கோவிலை ஒட்டி உள்ள ஊர் மக்களின் பார்வைக்கு அழைத்து  வரப்பட்டது.

கிரமாத்து அழகிகள் எருது பிடித்து வரும் காளைகளை கடைகண் பார்வையில்  சிறை பிடிக்க முயற்சித்தனர்.  அதைகண்டு பறை இசை எழுப்பி வீர முழக்கத்துடன்  கிராமத்து இளம் விடலைகள்  மிகு உற்சாகமாக எருதை பிடித்து வந்தனர்.  பின்னர் அனைத்து எருதுகளும் பெருமாள் கோவிலின் முன் கூடின. 

அறுவடை முடிந்து சுத்தம் செய்ய பட்ட நிலத்தை மைதானம் போன்று பாவித்து  கரை ஓரம் மக்கள் இடம் பிடித்து நிற்கவும் அமரவும் செய்தனர். எருதுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெறி ஊட்டி மைதானத்தில் விரட்ட பட்டன.  வெறி ஊட்ட பெரும் ஓலி எழுப்பும் வெடிகளையும் மற்றும் பிசாசு போன்ற சோள காட்டு பொம்மைகளையும் பயன்படுத்தினர்.

கிராமத்து வாலிபர்கள் எருதின் கழுத்து பகுதில் கட்டப்பட்ட சுமார் பத்து அடி நீளம் கொண்ட கயிறை பிடித்து வேகத்துடன் வரும் எருதை கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தனர்.  மக்கள்  உறவினர்களை கண்டு நலம் விசாரித்தும் பலகாரங்களை உண்டு மகிழ்ந்தும் எருது ஆட்டத்தை ரசித்தனர்.   மதி நன்றாக எட்டி பார்க்கும் வரை ஆட்டம் தொடர்ந்தது.   


பின்னர் வானம் இருட்டிய பின் வீரர்களையும் விழா தலைவர் களையும்  தமிழ் இசை கருவிகள்  முழங்க அவர்கள் வீடு வறை சென்று வழி அனுப்பி வைத்தனர். மறுநாள் இறைவன் வழிபாட்டிற்கு பின் எருதுகள் பரிசு தொகை உடன் வழி அனுப்பி வைத்தனர். 

மானத்தாள் நல்லா கவுண்டன் (M.N) பட்டி புன்செய் விவசாயி சின்னராசு எருது பிடிப்பதை பற்றி பகிர்ந்தது (காணொளி தொடர்பு மீது அழுத்தவும்). கவுண்டன் என்ற தமிழ் அடை மொழிக்கு நல்ல உழவன் என்ற பொருளும் உண்டு.






1 கருத்து:

malarvizhi சொன்னது…

dai annada ithu by malar