சனி, ஜூலை 7

வண்ணத் தமிழ்


அது என்ன வண்ணத் தமிழ் ! மொழிக்கு கூட வண்ணம் உண்டா ! மொழி என்பது தகவல் பரிமாற தானாக உருவாகியது. மனிதன் மொழியை ரசித்து இலக்கணம் வகுத்தான். 

வட்டார மொழியும் எந்த ஒரு எழுத்துவடிவம் பெறாமல் பாமர மக்களால் சிறப்பிக்க பட்டது.  வைகை தமிழ் , நெல்லை கணிர் தமிழ், கொங்கு பசுமை தமிழ், வட மாவட்ட வீர தமிழ் என்று நீண்டு கொண்டே போகும்.


என் மொழியறியா வேற்று நாட்டவரிடம் உரையாட பொது மொழி தேவை பட்டது. வெறும் தமிழ் மட்டும் வைத்து கொண்டு எப்படி மற்றவரிடம் வேலை செய்வது என்று நமக்கும்,  தன் மொழியறியா தமிழர்களிடம் எப்படி பொருட்களை விற்பது என்று வேற்று மக்களுக்கும் சிக்கல் இருந்தது. அதுவே தொழில் சார்ந்த பொது மொழி வளர்ப்புக்கு வழிவகுத்தது.    

இன்று தொல்லை காட்சிகளில் வண்ண தமிழ் சுண்ணாம்பு சலவையில் துவைத்த எடுத்த வெண்ணிற ஆடை போல் வெளுத்து கொண்டிருகிறது.  தமிழ் படித்தால் என்ன பயன் எதாவது காசு பார்க்க முடியுமா என்று பல கேள்விகள் நம் மனதில் எழுவது  உண்மைதான். காசு பார்க்க வயிறு வளர்க்க மற்ற மொழி குறிப்பாக மேற்கத்திய மொழி அறிவு அவசியம். அதற்காக தமிழை ஒதிக்கி தள்ளுவது சரியா.

அசாதாரன காலகட்டத்தில் நமது மனம் எந்த மொழியில் சிந்திக்கும் ? மேற்கத்திய மொழியிலா ?

நான் மற்ற நாட்டவர்களை குறை சொல்வதாக எண்ண வேண்டாம். ஒரு மலையாளி பெரும்பாலும் அவன் மொழியில்தான்  உரையாடுகிறான். தெலுங்கர்கள் , குறிப்பாக வட இந்தியர்களும் அப்படித்தானே. தமிழன் மட்டும் ஏன் தன் மொழியில் பேச மறுக்கிறான். அதுவும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் நம் மக்கள் பொது இடங்களில் போடும் டமார் ! உவமை படுத்த வழியில்லை. 

இன்று நாட்டை கைப்பற்ற மன்னிக்கவும் காப்பாற்ற துடிக்கும் மெழுகுவர்த்தி வீரர்கள் கவனத்திற்கு, தேச தந்தை காந்தி தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் (http://www.mkgandhi.org/edugandhi/education.htm )

தாய் மொழியில் கற்பது  நடை முறை சாத்தியம் இல்லாத சூழ்நிலை இன்று உருவாகி உள்ளது.  நண்பர்கள் தங்கள் செல்வங்களுக்கு ஓய்வு நேரங்களில் தமிழ் கற்று கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் நமது மொழியை காப்பற்ற முடியும். 

                             ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                             எழுமையும் ஏமாப் புடைத்து.
                


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

No